வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அதன் முக்கியத்துவம் என்ன‍? உபயோகமான தகவல்கள்

  சமீபத்தில் இறந்துபோன அந்த தொழிலதிபருக்கு, ஒரு மகன் மற் றும் திருமணம் ஆன இரண்டு மக ள்கள். தொழிலதிபர் பல்வேறு நிறு வனங்களில் நிறைய ம...

 

சமீபத்தில் இறந்துபோன அந்த தொழிலதிபருக்கு, ஒரு மகன் மற் றும் திருமணம் ஆன இரண்டு மக ள்கள். தொழிலதிபர் பல்வேறு நிறு வனங்களில் நிறைய முதலீடு செய்து வைத்திருந்தார். அந்த முத லீடுகளை தங்கள் பெயருக்கு மாற் றம் செய்ய அவரது வாரிசுகள் கேட்டனர். இதற்குத் தேவையான வாரிசுச் சான்றிதழ் தந்தார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனமோ, வாரிசுச் சான்றிதழ் மட்டும் போதாது, நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate) இருந்தால்தான் முதலீடுகளை
சமீபத்தில் இறந்துபோன அந்த தொழிலதிபருக்கு, ஒரு மகன் மற் றும் திருமணம் ஆன இரண்டு மக ள்கள். தொழிலதிபர் பல்வேறு நிறு வனங்களில் நிறைய முதலீடு செய்து வைத்திருந்தார். அந்த முத லீடுகளை தங்கள் பெயருக்கு மாற் றம் செய்ய அவரது வாரிசுகள் கேட்டனர். இதற்குத் தேவையான வாரிசுச் சான்றிதழ் தந்தார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனமோ, வாரிசுச் சான்றிதழ் மட்டும் போதாது, நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் (Succession certificate) இருந்தால்தான் முதலீடுகளை மாற்றித்தருவோம் என்று சொல்லிவிட்டது.
வாரிசுச் சான்றிதழ் என்றால் என்ன?, அது ஏன் முக்கியம்? என்பதே பலருக்கும் தெரியாத நிலையில், நீதி மன்றம் வழங்கும் இறங்குரிமை சான் றிதழ் என்றால் என்ன? வாரிசுச் சான்றி தழுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? அதை எப்படி வாங்க வேண்டும்? என்கிற கேள்விகள் பலருக்கும் உண்டு. இந்த கேள்விக்களுக்கு சட்டப்பூர்வமான விள க்கம் தருகிறார் வழக்கறிஞர் ரமேஷ். 
வாரிசுச் சான்றிதழ் என்றால்..?
ஒரு குடும்பத்தின் தலைவர் இறந்துவிட்டால் அவரின் சொத்துக்க ளையோ அல்லது பணப்பலன்களையோ பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகப் பெறப்படும் சான் றிதழ்தான் வாரிசுச் சான்றிதழ். எடுத்துக் காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திரு மணம் ஆன/ஆகாத மகன், மகள்கள் வாரிசுகள் ஆகிறார்கள். திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.
இதை எப்படி பெறுவது?
சாதி சான்றிதழ் வாங்குவதற்கு என்ன நடைமுறையோ, அதுதான் வாரிசுச் சான் றிதழ் வாங்குவதற்கும். வட்டாட்சியர் அலு வலகத்தில் உரிய மனுவுடன் இறந்தவரின் இறப்பு சான்றிதழ், வாரிசுகள் யார் யார், அவர்களின் வசிப்பிடச்சான் று ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர் வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய் வாளர் மூலம் விசாரணை நடத்திய பிறகு வாரிசுச் சான்றிதழ் வட்டாட்சி யரால் வழங்கப்படும்.
எப்போது மறுக்கப்படும்?
இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடை யே பிரச்னைகள் இருப்பது, தத்து எடு க்கப் பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோருவ து, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கேட்பது போன்ற தருணங்களில் வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை தர மறுக்கலாம்.
நீதிமன்றத்தை அணுகி யாரு க்கு வாரிசுச் சான்றிதழ் வழங் குவது என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம். ஏனெனி ல், யார் வாரிசு என் பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் வட் டாட்சியருக்கு கிடையாது. பிரச்னைக்குரியவர்கள் நீதி மன்றத்தை அணுகி இறந்தவ ருக்கும் தனக்கும் இருக்கும் உறவை நிரூபித்து, அவரது வாரிசு என்று கோரும் தகுதியை உணர் த்துவதன் மூலமே அவர் பெயருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்க வட்டாட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிடும்.  
எதற்கு வாரிசுச் சான்றிதழ்?
பட்டா போன்ற வருவாய் ஆவ ணங்களில் பெயர் மாற்றம் செய் வதற்கு, பொதுத் துறை நிறுவன ங்களில் அல்லது அரசுப் பணி களில் பணிபுரிந்து இறந்தவர்க ளின் குடும்ப ஓய்வூதியம் மற்று ம் பணி பலன்கள் பெறுவதற்கு வாரிசுச் சான்றிதழ் அவசியமா கிறது.
நிதி நிறுவனங்களில் அல்லது வங்கிகளில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத் தொகையைப்பெறுவ தற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய் ப்பு பெறவும் பயன்படுகிறது. இறந்தவருடைய சொத்துக்களை விற்ப தற்கோ, அடமானம் வைப்பதற்கோ உள்ள வாரிசு உரிமையை காண் பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப் படும்.

இறங்குரிமை சான்றிதழ்
(Succession certificate)
இறந்த நபரின் பெயரிலுள்ள முத லீடு /பங்குகள் மற்றும் அவருக்கு வரவேண்டிய கடன் போன்ற பணப் பலன்கள் பெற தனக்கு சட்டபூர்வ மான உரிமை இருக்கிறது என்ப தைக் காண்பிக்க ஒருவர் நீதிமன் றம் மூலம் பெறும் சான்றிதழ்தான் இறங்குரிமை சான்றிதழ்.
எடுத்துக்காட்டாக, இறந்த நபருக்கு ஐந்து வாரிசுகள் இருக்கலாம்.  
ஐந்து பேர் பெயரையும் உள்ளடக்கிய வாரிசுச் சான்றிதழ் இருக்கும். இந் த ஐந்து பேருக்கும் சுமார் 10 லட்ச ரூபாய் பங்குக ள்/முதலீடுகள் முதலிய வற்றில் உரிமை இருப்பதாகக் கொண்டால் அந்த முதலீட் டையோ அல்லது பங்குகளையோ ஐந்து பேரின் பெயருக்கும் மாற்றினால், பிற்காலத்தில் வேறு யாராவது உரிமை கோருவார்க ளா என்கிற பயம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வரலாம். இதற்காக இந்த ஐந்து பேரும் நீதி மன்றத் தை அணுகி தாங்கள் தான் வாரிசுகள் என்பதற்கு வாரிசுச் சான்றிதழை தாக்கல் செய்து, வேறு யாரும் வாரிசுகள் இல்லை என உறுதிமொழி கொடுத்து தங்க ளில் ஒருவருக்கோ அல்லது ஐவருக்குமோ அந்த முதலீட்டை பெயர் மாற்றம் செய்யலாம் என்று மனுதாக்கல் செய்ய வேண்டும்.
 
அந்த நிறுவனங்களில் எவ்வள வு முதலீடு/பங்குகள் உள்ளது என்ப தை மதிப்பிட்டு அதற்குரிய நீதிமன்ற கட்டணத்தைச் செலுத் தினால் நீதிமன்றம் அவர்களுக் கு இறங்குரிமை சான்றிதழ் வழ ங்கும். அந்த இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் நிறு வனங்கள் முதலீடுகளை/ பங்கு களை பெயர் மாற்றமோ அல்ல து பணத்தை திருப்புவதையோ தயக்கமில்லாமல் செய்து தரும்.
 

இறந்த வருடைய வீடு, நிலம் போ ன்ற அசையாச் சொத்துகளை அடைவதற்கு அல்லது அடமானம் வைப்பதற்கு இறங்குரிமை சான் றிதழ் தேவையில்லை. வாரிசுச் சான்றிதழ், இறங்குரிமை சான்றித ழை வைத்திருக்க வேண்டியதன் அவசியம் இப்போது புரிந்ததா?

Related

உபயோகமான தகவல்கள் 2443527233117688634

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item