கடனை திருப்பி செலுத்துங்கள்---அமுத மொழிகள்,

கடனை திருப்பி செலுத்துங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், அதற்கேற்ப தேவைகளும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. தேவைகளை நிறைவேற்றுவதற்கு கடன...

கடனை திருப்பி செலுத்துங்கள்

எவ்வளவு சம்பாதித்தாலும், அதற்கேற்ப தேவைகளும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. தேவைகளை நிறைவேற்றுவதற்கு கடன் வாங்கத்தான் வேண்டியிருக்கிறது. எனவே, கடன் வாங்குவது தவிர்க்க முடியாத விஷயம். அப்படி கடன் வாங்கியிருந்தால், அதை உரிய காலத்தில் திருப்பிக் கட்டி விட வேண்டும். இல்லாவிட்டால், கடன்காரன் திட்டத்தான் செய்வான். நபிகள் நாயகத்தின் வாழ்விலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. நாயகம் ஒரு வணிகரிடம் கடன் வாங்கியிருந்தார். ஆனால், அதைத் திருப்பிச் செலுத்தவில்லை. ஒருநாள் தன் தோழர் உமருடன் அவர் தெருவில் நடந்து கொண்டிருந்த போது, அந்த வணிகர் அவரைப் பார்த்து விட்டார்.

""நீர் வாங்கிய கடன் என்னாயிற்று? ஏன் திருப்பித் தரவில்லை?'' எனக்கேட்டு நபிகள் நாயகத்தை காரசாரமாக திட்ட ஆரம்பித்து விட்டார். அவரது திட்டுதலை நாயகம் அமைதியாக கேட்டுக் கொண்டார். ஆனால் அவரது நண்பர் உமருக்கு கடுங்கோபம் வந்து விட்டது. ஒரு கட்டத்தில் அவர் வணிகரை அடிக்கவே பாய்ந்து விட்டார். அப்போது நாயகம் அவரைத் தடுத்தார். அவர் உமரிடம், ""தோழரே! தாங்கள் செய்வது சரியல்ல! கொடுத்த கடனை அவர் திருப்பிக் கேட்கிறார். நான் அவருக்கு கொடுக்காமல் இருந்ததற்காக என்னைத்தான் நீர் கண்டித்திருக்க வேண்டும்,'' என்றார். அவரது பதிலைக்கேட்ட உமர் அமைதியாக நின்றார். நபிகள் நாயகத்தின் இந்த பதிலை சற்றும் எதிர்பாராத வணிகர், தான் அவரை திட்டியதற்கு வருந்தினார். அண்ணலாரிடம் மன்னிப்பும் கேட்டார். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தி விட வேண்டும் என்பதில் நபிகள் நாயகம் உறுதியைக் கடைபிடித்தார். கடன் வாங்கியவர்கள் அதனை வாங்கும்போது இருந்த அக்கறையை விட, அதøனை திருப்பி செலுத்துவதில் அதிக அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் வாழ்வில் நடந்த இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது.
ஜூம்ஆ தொழுகை
"ஜூம்ஆ' என்றால் வெள்ளிக்கிழமை. இந்த நாள் ஒரு இனியநாள். ஏனெனில், அன்று அல்லாஹ் நரகத்தில் வசிக்கும் ஆறுலட்சம் பேரை விடுதலை செய்கின்றான். ஆகவே, அன்றைய தொழுகைமிகவும் முக்கியமானதாகிறது. யார் ஒருவர், மூன்று வெள்ளிக்கிழமைகளில் காரணமின்றி தொழாமல் இருந்து விடுகிறாரோ, அவரை முனாபிக் (நயவஞ்சகன்) என்கிறார் நபிகள் நாயகம். ஒவ்வொரு நாளும் வானத்தின் மத்தியில் சூரியன் வரும்போது, நரகம் எரிக்கப்படுகின்றது. அந்நேரத்தில் எந்த தொழுகையையும் தொழக்கூடாது. ஆனால், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நரகம் எரிக்கப்படுவதில்லை. எனவே, அந்நாளில் மதியம் தொழுகை செய்யலாம். வெள்ளிக்கிழமை தொழுகையை விடாமல் கடைபிடிக்க வேண்டும்.
கடமைக்காக தொழலாமா?
நபிகள்நாயகம் மூதேவிகளுக்கு ஐந்து அடையாளங்கள் இருப்பதாகச் சொல்கிறார். அவை,
1. ஆலிம் உலமாக்களை (மார்க்க பேரறிஞர்கள்) விட்டு விலகியிருப்பவர்கள்.
2. மார்க்கத்திற்கு விரோதமாக தங்கள் பலத்தை செலவிடுபவர்கள்.
3. கடமைக்காக தொழுபவர்கள்.
4. பேச்சில் பொய்யை நிறைப்பவர்கள்
5. பொருள் சேகரிக்கும் ஆசையைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்கள்.
இந்த குணங்கள் உங்களிடம் இருந்தால் அவற்றை கைவிட்டு, மூதேவியிடமிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்.

Related

அமுத மொழிகள் 118852904626930944

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item