நன்மைகளை அழிக்கும் நெருப்பு--பொறாமை! பெட்டகம் சிந்தனை!!

நன்மைகளை அழிக்கும் நெருப்பு! பொறாமை’ மனிதனை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒரு கொடிய மன வியாதியாகும். இது நிம்மதியைக் க...

நன்மைகளை அழிக்கும் நெருப்பு!

ramalanபொறாமை’ மனிதனை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒரு கொடிய மன வியாதியாகும். இது நிம்மதியைக் கெடுத்துவிடும். அமைதியைக் குலைத்துவிடும். பொறாமையினால் சமூகம் பல அவலங்களை அனுபவித்து வருகிறது. எனவேதான் இஸ்லாம் பொறாமை குணத்தை வன்மையாகக் கண்டிக்கின்றது.

பொறாமைக்காரன் பிறரது இன்பத்தைக் கண்டு மனம் புழுங்குவான். பிறர் துன்பப்படும்போது இவன் இன்பமடைவான்.

“”உங்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு துன்பத்தை உண்டாக்குகிறது. உங்களுக்கு தீமை ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்” (அல்குர்ஆன் 3:119-120) என இறைமறை பொறாமைக்காரர்கள் பற்றிக் குறிப்பிடுகின்றது.

இவ்வுலகில் இறைவன் ஒரு சிலருக்கு வழங்கியுள்ள செல்வம், கல்வி, அழகு, ஆற்றல் போன்றவற்றை தான் பெறவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மையினாலும், ஆற்றாமை உணர்வினாலும் உண்டாவதுதான் பொறாமை உணர்வாகும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு மனிதனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளைப் பார்த்து அது அவனிடம் இல்லாமல் போக வேண்டும் என்று நினைப்பதே பொறாமையாகும். இன்னும் பொறாமைக்காரன் தனக்குக் கிடைக்காதது வேறு எவருக்கும் கிடைக்கக்கூடாது எனும் கீழ்த்தரமான உணர்வுடன் செயல்படுவான்.

“”கோபமும், பொறாமையும் மார்க்கத்தைப் பாழ்படுத்தும் நாசினிகள்” என்றனர் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள்.

பொறாமையும், ஈமான் என்ற இறை நம்பிக்கையும் முற்றிலும் மாறுபட்ட இரு அம்சங்களாகும். பொறாமை, உள்ளத்தை ஆக்ரமிக்க ஆக்ரமிக்க ஈமான் என்ற இறை நம்பிக்கை அவன் உள்ளத்தை விட்டு விலகிக் கொண்டே இருக்கும். அதனால்தான் நபி (ஸல்) அவர்கள், “”ஒரு அடியானின் உள்ளத்தில் பொறாமையும், ஈமானும் ஒன்று சேராது” என்று குறிப்பிட்டார்கள்.
பொறாமைக்காரன் எப்போதும் எரிச்சலுடன் காணப்படுவான். அவன் உள்ளத்தில் இரக்க குணம் குறையும், பாசம் நீங்கும். எவர் எதைப் பேசினாலும் எரிந்து விழுவான். கோபத்தையும் மனக்கொதிப்பையும் அடக்க முடியாமல் வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் கூட கடுமையாக நடந்து கொள்வான்.

இதனால் தான் பொறாமைக்காரர்களைப் பார்த்து “” உங்கள் கோபத்தாலேயே நீங்கள் நாசமாகுங்கள்” என்று கூறுமாறு அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்.
பிறர் மீது நாம் கொள்கின்ற பகைமையுணர்வு, கோபம், கர்வம், தலைக்கனம், போட்டி மனப்பான்மை மற்றும் மிதமிஞ்சிய சுயநலன் போன்றவையும், மனிதனின் உள்ளத்தில் பொறாமையைத் தோற்றுவிக்கின்றன. எனவேதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “”கோபமும், குரோதமும், பொறாமையும் அழிந்து போகட்டும்” என்றார்.

பொறாமையால் சமூகத்தில் பாவங்கள் பரவுகின்றன. பொறாமைக்காரன் தனது எதிரியைப் பற்றிப் பொய் சொல்வான். அவனைப் பற்றி துருவித் துருவி ஆராய்வான். அவதூறுகளைப் பரப்புவான். புறம் பேசுவான். ஏன்? கொலைகூட செய்ய முயற்சிப்பான். இவ்வாறு பொறாமை ஒரு மனிதனிடம் எண்ணற்ற பாவங்களை உருவாக்குகின்றது. காலப்போக்கில் அவன் மிருகம் போன்றே நடக்க ஆரம்பித்துவிடுவான். எனவேதான் அல்லாஹ் தன் அருள்மறையில் “”பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும்போது ஏற்படும் தீங்கை விட்டும் பாதுகாப்பாயாக” (அல்குர்ஆன்:113:5) என தன்னிடம் பாதுகாவல் தேடுமாறு பணிக்கின்றான்.

மனிதனை பாவங்களின் உறைவிடமாக மிருகமாக மாற்றிவிடும் பொறாமை குணத்தை ஒழித்துவிட வேண்டும். “”பொறாமை குணம் நாம் செய்த நன்மைகளை எல்லாம் அழிக்கும் நெருப்பு போன்றது” என்றனர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். எனவே மனிதனின் அழிவுக்கு காரணமான, நமது நல்லறங்களை எல்லாம் நாசமாக்குகின்ற பொறாமை என்ற தீய குணத்திலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வோமாக! இறைவன் அதற்கு அருள்புரிவானாக!

Related

பெட்டகம் சிந்தனை 4702219838496895603

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item